’நம்மை பிரகாசிக்கச் செய்யும் புனைவுகள்’-கவிஞர் கரிகாலன்

சமீப நாட்களாக அரசியல் விவாதங்களால் சோர்வு ஏற்பட்டிருந்தது. ஒரே மாதிரியான, யூகிக்கக்கூடிய வாதங்கள். கலைச்சொற்கள். சொல்லாட்சிகள். மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தன. அரசியல் நம் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்களுக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால்...

மிளிர்மன எழில்மதி – வாசகர் கடிதம்

மாண்புமிகு திரு. நர்சிம் அவர்களுக்கு, வணக்கம். உங்களின் “மிளிர் மன எள்ளில் மதி” என்ற நாவலை வாசித்த பின், அதைப் பற்றியஎன் உணர்வுகளை உங்களுடன் பகிர வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. இது என்மனதில் இருந்து...

‘செஞ்சுடர் ஞாயிறு’- காழ்

கவிஞர் நர்சிம் எழுதிய "காழ்' என்னும் கவிதைத்தொகுப்பு நூலில் அடங்கிய கவிதைகள் தனிநபரின் உளவியல் அனுபவங்களையும் சமூகத்தின் கூட்டுணர்வையும் ஒரே நேரத்தில் பேசும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. மொழி மிக எளிமையானதாக இருந்தாலும், அதன் ஆழம்...

‘நவரத்தினங்கள்’- சொம்புநீர்ப்பூ.

அசாதாரணமான வரிகள் நம்மை ஆழ்ந்து யோசிக்கும்படி தூண்டுகிறது. நம் உள்ளத்தில் தோன்றும் எல்லா நிகழ்வுகளுக்குமே எழுத்துருவம் கொடுத்து விட முடியாது. ஆனால் இந்நூலின் எழுத்தாளர் வித்தியாசமான எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டிருக்கிறார்....

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…